Saturday, April 21, 2012

குறிக்கோள் எது?


வெற்றிபெற்றவர்களின் வெற்றிப்பாதையினை படித்துப்பார்த்தால் மலைப்பாக இருக்கின்றது அல்லவா? எத்தனை தடவைகள் தோல்வி அடைந்தாலும் மீண்டும் நம்பிக்கையுடன் அவர்கள் மீள எழுந்த இடங்களே உண்மையில் சரித்திரம்.

ஆனால் இன்று எம் மத்தியில் சிலரை உங்கள் இலட்சியம் என்ன? என்று கேட்டால்……
நாலுபேர் மதிக்கிறமாதிரி அந்தஸ்தோட வாழவேண்டும் எனவும்,
எப்படி என்று தெரியவில்லை என்பார்கள்.
இன்னும் சிலரோ………எனக்கு எல்லாமே நல்லா இருக்கவேண்டும் அதெப்படி? என்ன என்றெல்லாம் சொல்ல முடியாது என்பார்கள்.

இவை எல்லாமே எப்படி என்றால், நான் ஒரு நல்ல இடத்திற்குப்போகவேண்டும்…….. ஆனால் அந்த இடமும் தெரியாது, வழியும் தெரியாது, எந்த வாகனத்தில் போவது என்றும் தெரியாது என்பதாகும்.
அப்படியானால் இவர்களின் பயணம் எப்படி இருக்கும்? பாதையில் சந்திப்பவர்கள் எல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியை சொல்வார்கள். அங்கெல்லாம் அலைந்து திரியவேண்டியதுதான்.

ஆகவே குறிக்கோள் எப்படி இருக்கவேண்டும்?

முதலில் எனக்கு என்ன வேண்டும் (Specific) என்பதில் முழுமையான தெளிவு இருக்கவேண்டும். பணம் என்றால் எவ்வளவு? பதவி என்றால் என்ன பதவி? வீடு என்றால் எத்தனை பேர்ச்சஸ்? எந்த இடத்தில் என்பதுபோன்ற தெளிவு வேண்டும்.

இரண்டாவது எந்த அளவு (Measurable) என்பது தெரியவேண்டும். அப்படி என்றால்தான், ஓராண்டில், மூன்றாண்டில், ஐந்தாண்டில் எவ்வளவு அடையலாம் என்பதை நிர்ணயம் செய்துகொள்ளமுடியும்;.

மூன்றாவது அடையக்கூடியதாக (Achievable) இருக்கவேண்டும். அதேவேளை நமது முழுமையான திறமைகளையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கவேண்;டும்.


நான்காவது நடைமுறைக்குச்சாத்தியமானதாக(Realistic) இருத்தல்வேண்டும். 

ஐந்தாவது அதை அடையும் கால அளவை மிகச்சரியாக நிர்ணயிப்பதாக (Time -bound)இருக்கவேண்டும். ஆதாவது ஆரம்பிக்கும் நாள், முடிக்கும் நாள் போன்றவற்றை வரையறுக்கவேண்டும்.

இதை ஆங்கிலத்தில் The Goal should be SMART என்பார்கள். அப்படி இருந்தாலத்தான் சரியான இலட்சியமாகும்.

ஒரு மனிதனுக்கு தன்னுடைய குறிக்கோள் என்னவென்று தெளிவாக தெரிந்துவிட்டால் அதில் பெரும் பங்கை அடைந்துவிட்டான் என்பதை எழுதிவைத்துவிடலாம்.

No comments:

Post a Comment