Showing posts with label Tamil Motivation. Show all posts
Showing posts with label Tamil Motivation. Show all posts

Saturday, April 21, 2012

குறிக்கோள் எது?


வெற்றிபெற்றவர்களின் வெற்றிப்பாதையினை படித்துப்பார்த்தால் மலைப்பாக இருக்கின்றது அல்லவா? எத்தனை தடவைகள் தோல்வி அடைந்தாலும் மீண்டும் நம்பிக்கையுடன் அவர்கள் மீள எழுந்த இடங்களே உண்மையில் சரித்திரம்.

ஆனால் இன்று எம் மத்தியில் சிலரை உங்கள் இலட்சியம் என்ன? என்று கேட்டால்……
நாலுபேர் மதிக்கிறமாதிரி அந்தஸ்தோட வாழவேண்டும் எனவும்,
எப்படி என்று தெரியவில்லை என்பார்கள்.
இன்னும் சிலரோ………எனக்கு எல்லாமே நல்லா இருக்கவேண்டும் அதெப்படி? என்ன என்றெல்லாம் சொல்ல முடியாது என்பார்கள்.

இவை எல்லாமே எப்படி என்றால், நான் ஒரு நல்ல இடத்திற்குப்போகவேண்டும்…….. ஆனால் அந்த இடமும் தெரியாது, வழியும் தெரியாது, எந்த வாகனத்தில் போவது என்றும் தெரியாது என்பதாகும்.
அப்படியானால் இவர்களின் பயணம் எப்படி இருக்கும்? பாதையில் சந்திப்பவர்கள் எல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியை சொல்வார்கள். அங்கெல்லாம் அலைந்து திரியவேண்டியதுதான்.

ஆகவே குறிக்கோள் எப்படி இருக்கவேண்டும்?

முதலில் எனக்கு என்ன வேண்டும் (Specific) என்பதில் முழுமையான தெளிவு இருக்கவேண்டும். பணம் என்றால் எவ்வளவு? பதவி என்றால் என்ன பதவி? வீடு என்றால் எத்தனை பேர்ச்சஸ்? எந்த இடத்தில் என்பதுபோன்ற தெளிவு வேண்டும்.

இரண்டாவது எந்த அளவு (Measurable) என்பது தெரியவேண்டும். அப்படி என்றால்தான், ஓராண்டில், மூன்றாண்டில், ஐந்தாண்டில் எவ்வளவு அடையலாம் என்பதை நிர்ணயம் செய்துகொள்ளமுடியும்;.

மூன்றாவது அடையக்கூடியதாக (Achievable) இருக்கவேண்டும். அதேவேளை நமது முழுமையான திறமைகளையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கவேண்;டும்.


நான்காவது நடைமுறைக்குச்சாத்தியமானதாக(Realistic) இருத்தல்வேண்டும். 

ஐந்தாவது அதை அடையும் கால அளவை மிகச்சரியாக நிர்ணயிப்பதாக (Time -bound)இருக்கவேண்டும். ஆதாவது ஆரம்பிக்கும் நாள், முடிக்கும் நாள் போன்றவற்றை வரையறுக்கவேண்டும்.

இதை ஆங்கிலத்தில் The Goal should be SMART என்பார்கள். அப்படி இருந்தாலத்தான் சரியான இலட்சியமாகும்.

ஒரு மனிதனுக்கு தன்னுடைய குறிக்கோள் என்னவென்று தெளிவாக தெரிந்துவிட்டால் அதில் பெரும் பங்கை அடைந்துவிட்டான் என்பதை எழுதிவைத்துவிடலாம்.

Saturday, March 31, 2012

சின்ன தோல்விகள் பிரமாண்ட வெற்றிக்கே..




கொல்கத்தா தொடரூர்தி நிலையத்தினுள் ஒரு தொடரூர்தி நுளைகின்றது.
மனது முழுவதும் ஏக்கம் கலந்த எதிர்பார்ப்புடன் அந்த தொடரூர்தியில் இருந்து இறங்கினான் ஒரு இளைஞன்.
அடுத்த முறை ஊருக்குத்திரும்புவதற்காக இந்த நிலையத்திற்;கு வரும்போது ஒரு நிரந்தரமான வேலையில் சேர்ந்திருக்கவேண்டும் என மனதிற்குள் சபதம் எடுத்திருந்தான்.

கல்கத்தாவில் சிறு சிறு கூலித்தொழில் புரிந்த தனது நண்பர்கள் தங்கியிருந்த ஒரு சிறிய அறையிலே தங்கிக்கொண்டான் அந்;த இளைஞன். ஏற்கனவே அந்த அறையில் நான்கு பேர்! இவன் ஐந்தாம் நபராக. அந்த சின்னஞ்சிறிய அறையில் ஆறு அடி மூன்று அங்குலம் உயரமுடைய இவனால் கால்களை நீட்டி முழுமையாக படுக்கக்கூட முடியவில்லை.

வேலை தேடும் படலத்தை தொடக்கினான். மூன்று மாதங்கள் ஒடியது தான் மிச்சம். நிறுவனங்களின் வெளியே நிற்கும் பாதுகாப்பு நபரை தாண்டி போவதே பெரிய பாடாக இருந்தது. எல்லா இடங்களிலும் களுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறைதான்.
ஏத்தனை நாள்தான் நண்பர்;களின் உழைப்பில் வயிற்றை கழுவுவது அவர்களே பெரிய கஸ்டத்தின் மத்தியில் சிறு சிறு வேலைகள் செய்து பிழைப்பவர்கள்.
ஊருக்கே திரும்பிவிடலாம், நான் ஒரு அதிஸ்டம் கெட்டவன், இது எவ்வளவு பெரிய நகரம்! இங்கெல்லாம் நம்மளையா கவனிக்கப்போகிறார்கள்? என பெரும் கவலைகளுடன் கண்ணீர் சொரிய பல இராத்திரிகளில் அழுதிருக்கின்றான் அவன்.
இருந்தபோதிலும் இத்தனை பேருக்கு வாழ்வு கொடுத்த இந்த நகரம் எனக்கு ஒரு வேலை கொடுக்காமலா போகப்போகிறது என எண்ணி நம்பிக்கையுடன் இருந்தான்;.

ஒரு நாள் ஓல் இந்தியா ரேடியோ அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள்; தேவை! என்ற விளம்பரத்;தைப்பார்த்து உடனடியாக அதற்கு விண்ணப்பம் செய்தார்;.
இன்று வந்;துவிடுமா? நாளை வந்துவிடுமா? என்று தபால்காரர் வரும் திசையை பார்த்துக்கொண்டிருந்தார். இரண்டு வாரங்கள் கழித்து நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு வந்திருந்தது.

அன்று அந்த அறையில் உற்சாகம் பொங்கி வழிந்தது. நேர்முக அழைப்பு வந்ததற்கே நண்பர்கள் தேனீர் உபசாரம் கொடுத்து கொண்டாடினார்கள்.
அவனது நண்பர்கள் தம் நண்பன் வானொலியில் செய்தி வாசிப்பதை கற்பனை செய்து மகிழ்ந்தார்கள் 
நேர்முகத்தேர்வு, தன் முறை வருவருவதற்காக காத்திருந்தார். ஓவ்வொருவராக உள்ளே சென்று கொண்டிருந்தனர். சேய்திகளை மனதினுள்ளே வாசித்துப்பார்த்தார், பல வினோதமான விளம்பரங்களை பல வகைகளில் சொல்லிப்பார்த்துக்கொண்;டார்.
அடிக்கடி தொண்டையை செருமிக்கொண்டார்.

அமிதாப் பச்சன்…….

தனது பெயர் கூப்பிடப்படவே நம்பிக்கையுடன் உள்ளே போனார். பிரவாகம் கட்டவிழ்த்ததுபோல அங்கே நடந்த குரல்தேர்வில் கர்ஜித்தார். விதவிதமான நிகழ்சிகளை தொகுத்துக்காட்டினார். 

நல்லது வெளியில் காத்திருங்கள் முடிவை சொல்கின்றோம் என்றனர் நிலையத்தினர். காத்திருந்தார் காலையில் இருந்து இரவு ஆகியபின்னும்…
தற்;செயலாக உள்ளே இருந்து வெளியே வந்த பெண் ஒருவர், ஏன் இருக்கின்றீர்கள் என வினாவினார். விடயத்தை சொன்னதும், உள்ளே சென்று மீண்டும் வந்தவர், 
உங்கள் குரல் சரியில்லை, வானொலிக்கு பொருத்தமாக இருக்காது என்றார்.
அமிதாப்பின் காதில்; அந்த வார்த்தைகள் அமிலமாகவே பாய்ந்தது.

நேரக கடற்கரை சென்று குலுங்க குலுங்க அழுதார்…….

அதன் பின்னர், நடிக்கத்தொடங்கி ஒப்பாரும், மிக்காரும் இல்லாத சுப்பர் ஸ்ரார் ஆனதெல்லாம் உங்களுக்கு தெரியும்.

பின்னர் அந்த சிம்மக்குரலுக்கு ஸ்ரார் ரீ.வி வழங்கிய கௌரவம், குரோர்பதியில் கலக்கியது அமிதாப்பிற்கு சொந்தமாக இன்று எத்தனை ரோடியோ சனல்கள் உள்;ளன என்பதும் உங்களுக்கு தெரியும்…
அமிதாப் பச்சனின் விருப்பப்படி அந்த சின்ன அறிவிப்பாளர் வேலை கிடைத்திருந்தால் உலகத்திற்கு ஒரு பெரிய சுப்பர் ஸ்ரார் கிடைத்திருப்பாரா?

சின்ன சின்ன தோல்விகள் எல்லாம் பிரமாண்ட வெற்றிகளுக்கே.



Wednesday, March 7, 2012

உபுண்டு



ஆபிரிக்கா தந்த அருமை தத்துவம் உபுண்டு


ஆபிரிக்க கலாசாரத்தில் உலகம் இப்போது உன்னிப்பாக கண்டு முறைப்படுத்த எத்தனிப்பது உபுண்டு. உபுண்டுவின் அடிப்படைக்கொள்கை 'நீ இல்லாமல் நான் இல்லை' என்பதுதான்.


அதாவது இந்த உலகத்தில் எவரும் தனித்து வாழ்ந்துவிடமுடியாது. இன்று நீங்கள் ஒரு நல்ல நிலையில் உள்ளீர்களே என்றால் அதற்கு பல நூறுபேர், அல்லது பல ஆயிரம்பேர் அதற்கு காரணமாக உங்கள் பின்னால் நிற்கின்றார்கள் அதை நாம்உணரவேண்டும்.
எந்த சந்தர்ப்பத்திலும் அதை மறந்தவிடக்கூடாது.

நாளாந்தம் பலர் எமக்கு உதவிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அனால் இவை அனைத்தையும் நாம் நினைவுவைத்திருப்பதில்லை. ஆனால் அவர்களின் ஒவ்வொரு உதவியும் இல்லாவிட்டால் நாம் இல்லை. நாம் நமக்கு உதவி செய்தவர்களை மறந்தால்க்கூட பவாயில்லை. ஆனால் பலர் நமக்கு உதவி செயதுள்ளனர் செய்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

அதேபோல நாம் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் மலரவேண்டும். இதன்மூலம் மற்றவர்கள் பிழைவிட்டால்க்கூட எங்களுக்கு எரிச்சில் வராது. நேற்று நான் பிழைவிடும் போது ஒருவர் திருத்தி உதவிசெய்தார் இன்று இவனுக்கு உதவ எனக்கு ஒரு சந்தாப்பம் கிடைத்துள்ளதுஎன நினைப்போம். இதுதான் உபுண்டுவின் தத்துவம்.  ச ந்தோசத்திற்கான நிர்வாக முறை.

Monday, March 5, 2012

நினைத்ததைவிட நிறைவாக....




ஒரு காட்டின் நடுவில் திட்டியாக இருந்த நிலத்தில் மூன்று பெருவிருட்சங்கள் இருந்தன. அவை மூன்றும் மிகுந்த இறை பக்தி கொண்டவை.



முதலாவது மரம் மிகப்பருத்த மரமாகவும், இரண்டாவது மரம் ஒரே சீரான உயர்ந்த மரமாகவும், மூன்றாவது மரம் நன்றாக கிளைபரப்பி பொலிவான மரமாகவும் இருந்தன.
இறை துதி பாடும் இந்த மூன்று மரங்களுக்கும் ஒவ்வொரு ஆசை... ஏன் பேராசை என்றுகூடச்சொல்லலாம் அதை. அவற்றின் ஆசைகள் என்ன தெரியுமா?

மிகப்பருத்த முதலாவது மரத்தின் ஆசை தான் பருமன் என்பதால் தன்னைக்கொண்டு மிகச்சிறந்த பெட்டகம் ஒன்று அடைக்கப்படவேண்டும் எனவும் அந்த பெட்டகத்தில் உலகில் விலைமதிப்பில்லாத பொருளொன்று வைக்கப்படவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டது.

இரண்டாவது சீரான உயரமான மரம் வேண்டிக்கொண்டதோ இப்படி... இறைவா நான் சீரான நீளம் உடையவன் என்பதால், என்னை மகாசமுத்திரத்தில் கப்பலாக செய்து ஓட வைக்கவேண்டும், அதில் மன்னாதி மன்னர் ஒருவர் ஏறி பயணம் செய்யவேண்டும் என்றது.

மூன்றாவது மரத்தின் ஆசையோ... இறைவா நான் கிளைபரப்பி அழகாக இருக்கின்றேன் இறைவா... நான் உம்மை ஒரு தடைவ சுமக்கவேண்டும் இதுவே என் அசை என்றது.

அவை வேண்டிக்கொண்ட அடுத்த நாளே காட்டுவாசிகள் வந்து அந்த மூன்று மரங்களையும் அடியோடு வெட்டிச்சாய்த்தனர். முதலாவது பருத்த மரத்தை, வெட்டி பெரிதாக தோண்டி, ஆடு மாடுகளுக்கு தீவனம்போடும் பெரிய அண்டாவாக அதை தயாரித்தனர், இரண்டாவது ஒரு தோணியாக்கப்பட்டு தொழு நோயாளர்களையும், ஏழைகளையும் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்டது. மூன்றாவதோ பாவம் இரண்டு நீளமான பலகைகளாக அறுக்கப்பட்டு அரச பட்டறையில் அடைக்கப்பட்டது. 

மூன்றும் தம் ஆசைகளையும் நிறைவேறியிருப்பதையும் நினைத்து வேதனை கொண்டன.

ஓர்நாள் மிகக்கடுமையான குளிர் அடித்தது, வானில் என்றுமில்லாத பிரகாசம், பரசவ வலியால் துடிக்கும் ஒரு பெண்ணின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது, அந்த குரல் தீவனம்போட வைக்ககப்பட்டிருந்த பருத்த மரம் இருக்கும் தொழுவத்திற்கு வந்து சேர்தது.
குழந்தையும் பிறந்தது, தந்தையானவர், இந்த பருத்த மரத்தை, சுத்தப்படுத்தி, அதனுள் வைக்கோலை இட்டு, இதமாக பிறந்த குழந்தையினை அதனுள் வைத்தார், ஒளி பொருந்தி அந்த குழந்தையின் ஸ்பரிசம் கிடைக்கும் முன்னமே பருத்த மரம் தன் ஆசைகள் அனைத்தும் நிறைவேறிய பரவச நிலையை அடைந்தது.

சில வருடங்கள் கழிந்து ஏழைகள் செல்லும் கப்பலில் இளம் துறவி ஒருவர் எறினார், அவர் பாதம் பட்டவுடனேயே அந்த இரண்டாவது மரமாகிய தோணியிடம் ஒரு சிலுசிலுப்பு, ஒரு கட்டத்தில் திடீர் என மழை புயல் என்பன தென்படவே அவர் அதை கட்டுப்படுத்தினார், மன்னாதி மன்னரை எதிர்பார்த்திருந்த அந்த இரண்டாவது மரம் பூரண திருப்தியும் பெருமிதமும் அடைந்தது.

இன்னும் சில வருடங்கள் கழித்து பட்டறையில் கிடந்த மூன்றாவது மரம் அவசர அவசரமாக ஒரு கூட்டல்குறிபோல் தறையப்பட்டு, எடுத்துச்செல்லப்பட்டு, முள் முடி சுமந்த ஒருவர்மேல் வைக்கப்பட்டு, அவர் சவுக்கால் அடிக்கப்பட்டு, இதை காவி ஒருமலைவரை சென்று இதிலேயே அறையப்பட்டார். 

விலைமதிப்பில்லாத பொக்கிசம் கேட்ட முதல் மரத்திற்கு தானே அதனுள் இருந்தும், மன்னாதி மன்னனை கொண்டு செல்லக்கேட்ட இரண்டாவது மரத்திற்கு தன்னையே கொண்டு செல்லவைத்தும், தன்னை காவவேண்டும் என்ற கேட்ட மூன்றாவது மரத்தை தானே காவியும் இறைவன் அருள் கொடுத்தார்.

நம்பிக்கையுடன் இருங்கள் இறைவன் நீங்கள் கேட்பதைவிட அதிகமாகவே தருவார்.

Sunday, February 26, 2012

மகிழ்ச்சிக்காய் ஏழு மணிமுத்துக்கள்.


பூமியில், மனிதனின் பரிமாணம் என்பது கூர்ப்படைந்துகொண்டு செல்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பரிமாணம் என்பது வளர்ச்சியடைகின்றது என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கின்ற போதிலும், மனிதன் பரிணமிக்கப்பட்ட நோக்கமான – பிறத்தல், இருத்தல், மகிழ்தல்;, மரணம்………..என்பதில் முக்கியமான மகிழ்தல் என்பது மறைந்துபோய்க்கொண்டிருக்கின்றது என்பது உலகலாவிய உளவியல் கணிப்பு.

உலகமெங்கிலும், மகிழ்சியை வழங்குவதற்கான மகிழ்வகங்களும், ஆடம்பர உல்லாசபுரிகளும், பிறக்கின்ற வேளையிலும், மகிழ்ச்சி என்பது பெரும்பாலனவர்களுக்கு எட்டாக்கனியாக ஏக்கத்தை வரவழைத்துக்கொண்டுதான் இருக்கின்றது. உளவியலின் தந்தை எனப்போற்றப்படும் ஷிக்மென் பிரைட்டும் - மகிழ்ச்சியை மையமாகவைத்தே காரண காரியங்கள் பிறப்பிலிருந்து இறப்புவரை, சுழன்றுகொண்டிருக்கின்றது என வாதத்தை முன்வைத்தாலும், இன்று பல காரியங்களில் ஈடுபடுகின்ற மனிதன் மகிழ்ச்சியை தொலைத்த கதை புதுமையதானதுதான். மகிழ்ச்சியை தொலைத்த மனங்களுக்கு மருந்தாக மாறாது விட்டாலும், சிறு கைவைத்தியமாக இருக்கின்ற மகிழ்சிக்காய் ஏழு மணிமுத்துக்கள் என்கின்ற இவ்வாக்கம் சாதாரண வாழ்வியலில் மனிதன் கடைப்பிடித்து மகிழ்ச்சியின் பக்கத்திலேனும் குடியேறுவதற்கு குடிசை போட்டுத்தரும் என்ற நம்பிக்கையுடன் குறிப்புக்களை ஆரம்பிக்கின்றேன்.

குறிப்பு -1
வாழ்க்கை எப்போது நேர்த்தியானது என்கின்ற எண்ணத்தை தவிருங்கள்.
எங்களில் உள்ள பெரிய குறைபாடு, எல்லா விடயங்களும், எல்லாக்காரியங்களும், நேர்த்தியாக இருக்கவேண்டும், வெற்றி மட்டுமே காரியங்களின் இறுதிப்படி என்று கணிப்பிட்டுக்கொள்வதாகும். தோல்விகளும், வெற்றியை நோக்கிய படிக்கற்கள் என்பது பல இடங்களில் மறந்துபோனதாகவே நினைக்கத்தோன்றுகின்றது. மின்குமிழை உலகத்திற்கு படைத்த தொமஸ் அல்வா எடிசனை ஒருபத்திரிகையாளர் பேட்டிகாணும் போது "நீங்கள் தங்குதன் இளையின் மூலமாக சரியான மின்குமிழை படைப்பதற்கு முன்னர் 3000 முறை பிழையான மூலகங்களை ஆராய்து தோல்வி கண்டுள்ளீர்களே?" -இது சலிப்பை தரவில்லையா? எனக்கேட்டபோது, "இல்லை…3000முறையும் நான் வெற்றியடைந்திருக்கின்றேன். எப்டி எல்லாம் ஒரு மின்குமிழ் செய்யக்கூடாது என்பதை கற்றுக்கொள்வதில். என தோல்விப்படிகளைக்கூட வெற்றியாக்கியகதையினை சுருங்கச்சொன்னார். இந்தப்பக்குவம் எம்மத்தியில் எத்தனைபேருக்கு இருக்கின்றது?

நாளாந்த வாழ்க்கையில், நாம் காண்கின்ற சாதாரண மனிதர்கள் தொடக்கம், சமுகம் வரை நேர்த்தியாக இருக்கவேண்டும் என்பதும், எப்போதும் எம் சிந்தனையோட்டத்துடன் ஒத்துப்போக வேண்டும் என்பதும் எல்லோரதும் விருப்பமாக இருக்கின்ற போதிலும் யதார்த்தம் என்னவோ, எதிர்மாறானதாகவே இருக்கின்றது. மனிதன் பல்வகைமை உடையவன் தனிமனித ஆளுமை குடும்பப்பின்னணி, கல்வி, இயல்பூக்கம், என்பன மனிதர்ளை ஒருவரிடமிருந்து இன்னொருவரை வேறுபட்டவர்களாக படைத்திருக்கின்றது. இதுதான் மனிதனின் அழகும், தனித்துவமும் எனலாம். இருந்தபோதிலும் இந்த உண்மையினை ஜீரணிக்க மறந்து நாளந்த அலுவல்களில் முரன்பாடுகளுக்குள் மூழ்கிப்போய் மகிழ்ச்சியை மறக்கவேண்டிய அவலநிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
"கிரேக்க தத்துவம் ஒன்று இந்த உண்மையினை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கின்றது". வாழ்க்கை என்பது உண்மையில் பொய்மையே - இருந்தபோதிலும்இந்த உண்மை தெரியாததுபோல வாழ்ந்துகொண்டு போவதுதான் வாழ்க்கையை சந்திக்க எதனிலும் சிறந்த வழி. மனித வேறுபாடுகளை அங்கிகரிப்போம்! மனங்களின் மகிழ்சியை கொண்டாடுவோம்.

குறிப்பு -2
மற்றயவர்களுடனான தேவையற்ற ஒப்பீட்டை தவிர்தல்.

இன்று பலரது சந்தோசத்தை சாப்பிடும் விடயமாக மற்றவர்களுடனான ஒப்பீடு அமைந்துவிடுகின்றது. அண்மையில் நண்பர் ஒருவரை சந்தித்தபோது, அவர் மகிழ்ச்சி தொலைந்த முகம் என் கேள்விக்குறிகளுக்கு வழியமைத்துக்கொடுத்தது.நீண்ட நேர சம்பாசனையின் பின்னர், விடயம்.... அவர் அலுவலகத்தில் அவர் பின்னால் உத்தியோகம் பெற்றவர்கள் நல்ல நிலையில் இருப்பதும், அவர்கள் வசதிபடைத்தவர்களாக மாறியிருந்தமையும் இவரது கவலைக்கான அடிப்படை வித்துக்களாக அமைந்திருந்தன.
நண்பரை நீண்டநாள் அறிந்தவர் என்ற முறையில் அவர்கூட, நல்ல உத்தியோகத்திலும், நல்ல பொருளாதார நிலையில் இருந்தும்கூட, தேவையற்ற ஒப்பீடுகள் அவரது சந்தோசத்தை அவருக்கு காட்டமறுத்த இருண்ட கண்ணாடியாகியது.

குறிப்பு -3
அன்பு செலுத்துங்கள்.
அன்பு என்பது கண்ணாடிபோன்றது. அன்பைக்காட்டித்தான் அன்பைப்பார்க்கமுடியும். அன்பு விதைக்கப்பட்டால்த்தான் அன்பின் அறுபடை பற்றி நாம் அக்கறைப்படுவதில் நியாயமும் இருக்கும். இன்று எம்மில் பலரில் இனங்காணப்பட்ட குறைபாடுகளில் ஒன்று அன்பை எதிர்பார்க்கின்ற நாம் கொடுப்பதில் மட்டும் குறைப்பட்டுக்கொள்கின்றோம்.
பல குடும்பப்பிணக்குளுக்கும் அடிப்படைக்காரணமாக அமைவது இதுவேதான்.இது இரண்டு பிச்சைக்காரர்கள் ஒருவரிடம் மற்றயவர் பிச்சை கேட்பதற்கு ஒப்பானது. சிலரிடம் இருக்கின்ற பொதுவானதொரு தவறு அன்பை வெளிக்காட்டத்தயங்குவதாகும். அன்பை வெளிப்படுத்துதல் என்றால் என்ன? என சில புருவங்கள் உயர்வது புரிகின்றது. இது நாளாந்தப்பணிகளில் மற்றயவர்களுக்கு உதவி செய்தல் ஒத்துணர்தல் செவிமடுத்தல், மதிப்பளித்தல், என்கின்ற கருமங்ளோடு காவிச்செல்லப்படக்கூடியதாகும்.

குறிப்பு -4
மகிழ்ச்சியான வேலைநேரம்.

எங்களில் பலர் உயிரோட்டமான நேரத்தை வேலைத்தளங்களிலேயே செலவுசெய்யவேண்டிய நிர்பந்தத்தில் நீந்துபவர்கள்தான்.இந்த வேலைத்தளங்கள் எம் மகிழ்ச்சியின் பகுதியான விடயம் என்பது யதார்தபூர்வமான உண்மை. மேலைத்தேசங்களில் "Quality work life [QWL] policy" என அலுவலக வாழ்க்கையினை வழப்படுத்துவது பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கின்ற இக்காலகட்டத்தில் ஆகக்குறைந்தது எம் அலுவலகத்தை நாம் மகிழ்ச்சியாக்க ஈடுபாட்டுடன் வேலை செய்தல் நட்புறவை வழர்த்தல் முரண்பாடுகளை தவிர்த்தல் எம்சூழலை நாமே உருவாக்குதல் என நாம் செய்யக்கூடிய மாற்றங்களை ஆரம்பித்துவைப்பது எம் சந்தோசத்திற்கு நாம் அத்திவாரமிடுவது போன்றதாகும்.


குறிப்பு -5
உடல் நலம்.

மகிழ்ச்சி என்பது மனத்துடனும், உடலுடனும் இரண்டறக்கலந்த விடயம் என்பது அனைவரும் அறிந்ததே. மகிச்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு நாளந்த உடல் ஆரோக்கயத்தில் கவனம் செலுத்துதல் அவசியமாகின்றது. நித்திரை விழித்தல், உளநெருக்கத்தை ஏற்படுத்தும் நீண்ட வேலைநேரம், உணவுப்பழக்கவழக்கம், என்பன இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம்களாகும்.

குறிப்பு -6
எனக்கே எனக்காய்


எங்களில் பலருக்கு நாளாந்தம் எழுகின்ற சின்னச்சின்ன ஆசைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்வதில் தடைகள் இருக்கத்தான் செய்கின்றது. குளிர்ந்த மழைநாளில் வீதியில் நடக்கவேண்டும் என்று நினைப்பதும், மலையோரத்து குடிலில் வசிக்கவேண்டும் என்பதும் கூட இதில் அடங்கும். இருந்தபோதிலும் வாழ்க்கை சீரோட்டத்தில் இவை நிறைவேறாத பட்டியலில் அடங்கிவிடுகின்றது. இதற்கு காரணங்கள் என்ற வகையில் நேரம், பணம், வசதி, பாதுகாப்பு என்பன விபரிக்கப்படலாம். இருந்தபோதிலும் உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்ய முனைவது உங்கள் மகிழ்ச்சியை தூண்டும் வழியாக அமையும் என்பதை மறந்துவிடவேண்டாம். இந்த விருப்பக்கள் உங்களையோ, மற்றவர்களையோ இன்றும் என்றும் பாதிக்காதவகையில் பாhர்த்துக்கொள்ளுதல் விரும்பத்தக்கது.
குறிப்பு -7
திட்டமிடல்
நம்வாழ்க்கைப் பயணத்தில் எல்லோரும் ஏந்திச்செல்லவேண்டிய துடுப்பு திட்டமிடல். இன்னும் இரண்டு வருடத்தில் என்ன தொழில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பது தொடக்கம் தனிமனித வழர்ச்சிக்கான பண்புகளையும் பாதைகளையும் திட்டமிடல் என்பது எம்வாழ்க்கையை தொடர்ச்சியாக மகிழ்ச்சி என்கின்ற பாதையில் நடத்தி செயல்வலதற்கு எதனிலும் சிறந்த வழி.
உளவியல் ரீதியாகச்சொல்வதானால்க்கூட நாமொன்றைத்திட்டமிட்டு அதை அடையும்போதுதான் மகிழ்ச்சி என்கின்ற உணர்ச்சி பிரசவம் எடுகின்றது. Mc Cleland Achievement teary உம் இதை ஆமோதிக்கின்றது.திட்டமிடல் என்பதும் கூட மகிழ்ச்சியான விடயம்தான்
"தத்துவம் அஸி – நீ அதுவாகின்றாய்- அதாவது நீ எதை நினைத்துக்கொண்டிருக்கின்றாயோ நீ அதுவே ஆகின்றாய் என்கின்றது உபநிடதம். இதைத்தான் இந்தியாவின் அணுசக்தியின் தந்தை எனப்போற்றப்படும் டொக்ரர். அப்துல்கலாமும் கனவு காணுங்கள் என்று வாழ்க்கையின் எதிர்காலத்தை பார்வைப்புலப்படுத்தும் முயற்சியின் உந்துதல் கொடுத்தார். நேற்று முடிந்துபோன விடயத்திற்கான விமர்சனத்தில் அக்கறை காட்டுவதை விட நாளை நடக்கப்போகும் விடயத்திற்கு ஆலோசனை கேட்பது நல்லது என்பது இந்திய வர்த்தகத்தின் வெற்றியாளர் அம்பானியின் கருத்து. "Pleasure on your Hand" என்பது மேற்கத்தேயச் சிந்தனை அதாவது, "உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில்த்தான் இருக்கின்றது";. மனத்திற்கு மருந்திடும் மகிழ்ச்சியை காத்திட இந்த மணிமுத்துக்கள் உதவின அதுவும் மகிழ்ச்சியே.