Saturday, March 31, 2012

சின்ன தோல்விகள் பிரமாண்ட வெற்றிக்கே..




கொல்கத்தா தொடரூர்தி நிலையத்தினுள் ஒரு தொடரூர்தி நுளைகின்றது.
மனது முழுவதும் ஏக்கம் கலந்த எதிர்பார்ப்புடன் அந்த தொடரூர்தியில் இருந்து இறங்கினான் ஒரு இளைஞன்.
அடுத்த முறை ஊருக்குத்திரும்புவதற்காக இந்த நிலையத்திற்;கு வரும்போது ஒரு நிரந்தரமான வேலையில் சேர்ந்திருக்கவேண்டும் என மனதிற்குள் சபதம் எடுத்திருந்தான்.

கல்கத்தாவில் சிறு சிறு கூலித்தொழில் புரிந்த தனது நண்பர்கள் தங்கியிருந்த ஒரு சிறிய அறையிலே தங்கிக்கொண்டான் அந்;த இளைஞன். ஏற்கனவே அந்த அறையில் நான்கு பேர்! இவன் ஐந்தாம் நபராக. அந்த சின்னஞ்சிறிய அறையில் ஆறு அடி மூன்று அங்குலம் உயரமுடைய இவனால் கால்களை நீட்டி முழுமையாக படுக்கக்கூட முடியவில்லை.

வேலை தேடும் படலத்தை தொடக்கினான். மூன்று மாதங்கள் ஒடியது தான் மிச்சம். நிறுவனங்களின் வெளியே நிற்கும் பாதுகாப்பு நபரை தாண்டி போவதே பெரிய பாடாக இருந்தது. எல்லா இடங்களிலும் களுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறைதான்.
ஏத்தனை நாள்தான் நண்பர்;களின் உழைப்பில் வயிற்றை கழுவுவது அவர்களே பெரிய கஸ்டத்தின் மத்தியில் சிறு சிறு வேலைகள் செய்து பிழைப்பவர்கள்.
ஊருக்கே திரும்பிவிடலாம், நான் ஒரு அதிஸ்டம் கெட்டவன், இது எவ்வளவு பெரிய நகரம்! இங்கெல்லாம் நம்மளையா கவனிக்கப்போகிறார்கள்? என பெரும் கவலைகளுடன் கண்ணீர் சொரிய பல இராத்திரிகளில் அழுதிருக்கின்றான் அவன்.
இருந்தபோதிலும் இத்தனை பேருக்கு வாழ்வு கொடுத்த இந்த நகரம் எனக்கு ஒரு வேலை கொடுக்காமலா போகப்போகிறது என எண்ணி நம்பிக்கையுடன் இருந்தான்;.

ஒரு நாள் ஓல் இந்தியா ரேடியோ அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள்; தேவை! என்ற விளம்பரத்;தைப்பார்த்து உடனடியாக அதற்கு விண்ணப்பம் செய்தார்;.
இன்று வந்;துவிடுமா? நாளை வந்துவிடுமா? என்று தபால்காரர் வரும் திசையை பார்த்துக்கொண்டிருந்தார். இரண்டு வாரங்கள் கழித்து நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு வந்திருந்தது.

அன்று அந்த அறையில் உற்சாகம் பொங்கி வழிந்தது. நேர்முக அழைப்பு வந்ததற்கே நண்பர்கள் தேனீர் உபசாரம் கொடுத்து கொண்டாடினார்கள்.
அவனது நண்பர்கள் தம் நண்பன் வானொலியில் செய்தி வாசிப்பதை கற்பனை செய்து மகிழ்ந்தார்கள் 
நேர்முகத்தேர்வு, தன் முறை வருவருவதற்காக காத்திருந்தார். ஓவ்வொருவராக உள்ளே சென்று கொண்டிருந்தனர். சேய்திகளை மனதினுள்ளே வாசித்துப்பார்த்தார், பல வினோதமான விளம்பரங்களை பல வகைகளில் சொல்லிப்பார்த்துக்கொண்;டார்.
அடிக்கடி தொண்டையை செருமிக்கொண்டார்.

அமிதாப் பச்சன்…….

தனது பெயர் கூப்பிடப்படவே நம்பிக்கையுடன் உள்ளே போனார். பிரவாகம் கட்டவிழ்த்ததுபோல அங்கே நடந்த குரல்தேர்வில் கர்ஜித்தார். விதவிதமான நிகழ்சிகளை தொகுத்துக்காட்டினார். 

நல்லது வெளியில் காத்திருங்கள் முடிவை சொல்கின்றோம் என்றனர் நிலையத்தினர். காத்திருந்தார் காலையில் இருந்து இரவு ஆகியபின்னும்…
தற்;செயலாக உள்ளே இருந்து வெளியே வந்த பெண் ஒருவர், ஏன் இருக்கின்றீர்கள் என வினாவினார். விடயத்தை சொன்னதும், உள்ளே சென்று மீண்டும் வந்தவர், 
உங்கள் குரல் சரியில்லை, வானொலிக்கு பொருத்தமாக இருக்காது என்றார்.
அமிதாப்பின் காதில்; அந்த வார்த்தைகள் அமிலமாகவே பாய்ந்தது.

நேரக கடற்கரை சென்று குலுங்க குலுங்க அழுதார்…….

அதன் பின்னர், நடிக்கத்தொடங்கி ஒப்பாரும், மிக்காரும் இல்லாத சுப்பர் ஸ்ரார் ஆனதெல்லாம் உங்களுக்கு தெரியும்.

பின்னர் அந்த சிம்மக்குரலுக்கு ஸ்ரார் ரீ.வி வழங்கிய கௌரவம், குரோர்பதியில் கலக்கியது அமிதாப்பிற்கு சொந்தமாக இன்று எத்தனை ரோடியோ சனல்கள் உள்;ளன என்பதும் உங்களுக்கு தெரியும்…
அமிதாப் பச்சனின் விருப்பப்படி அந்த சின்ன அறிவிப்பாளர் வேலை கிடைத்திருந்தால் உலகத்திற்கு ஒரு பெரிய சுப்பர் ஸ்ரார் கிடைத்திருப்பாரா?

சின்ன சின்ன தோல்விகள் எல்லாம் பிரமாண்ட வெற்றிகளுக்கே.



Wednesday, March 7, 2012

உபுண்டு



ஆபிரிக்கா தந்த அருமை தத்துவம் உபுண்டு


ஆபிரிக்க கலாசாரத்தில் உலகம் இப்போது உன்னிப்பாக கண்டு முறைப்படுத்த எத்தனிப்பது உபுண்டு. உபுண்டுவின் அடிப்படைக்கொள்கை 'நீ இல்லாமல் நான் இல்லை' என்பதுதான்.


அதாவது இந்த உலகத்தில் எவரும் தனித்து வாழ்ந்துவிடமுடியாது. இன்று நீங்கள் ஒரு நல்ல நிலையில் உள்ளீர்களே என்றால் அதற்கு பல நூறுபேர், அல்லது பல ஆயிரம்பேர் அதற்கு காரணமாக உங்கள் பின்னால் நிற்கின்றார்கள் அதை நாம்உணரவேண்டும்.
எந்த சந்தர்ப்பத்திலும் அதை மறந்தவிடக்கூடாது.

நாளாந்தம் பலர் எமக்கு உதவிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அனால் இவை அனைத்தையும் நாம் நினைவுவைத்திருப்பதில்லை. ஆனால் அவர்களின் ஒவ்வொரு உதவியும் இல்லாவிட்டால் நாம் இல்லை. நாம் நமக்கு உதவி செய்தவர்களை மறந்தால்க்கூட பவாயில்லை. ஆனால் பலர் நமக்கு உதவி செயதுள்ளனர் செய்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

அதேபோல நாம் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் மலரவேண்டும். இதன்மூலம் மற்றவர்கள் பிழைவிட்டால்க்கூட எங்களுக்கு எரிச்சில் வராது. நேற்று நான் பிழைவிடும் போது ஒருவர் திருத்தி உதவிசெய்தார் இன்று இவனுக்கு உதவ எனக்கு ஒரு சந்தாப்பம் கிடைத்துள்ளதுஎன நினைப்போம். இதுதான் உபுண்டுவின் தத்துவம்.  ச ந்தோசத்திற்கான நிர்வாக முறை.

Monday, March 5, 2012

நினைத்ததைவிட நிறைவாக....




ஒரு காட்டின் நடுவில் திட்டியாக இருந்த நிலத்தில் மூன்று பெருவிருட்சங்கள் இருந்தன. அவை மூன்றும் மிகுந்த இறை பக்தி கொண்டவை.



முதலாவது மரம் மிகப்பருத்த மரமாகவும், இரண்டாவது மரம் ஒரே சீரான உயர்ந்த மரமாகவும், மூன்றாவது மரம் நன்றாக கிளைபரப்பி பொலிவான மரமாகவும் இருந்தன.
இறை துதி பாடும் இந்த மூன்று மரங்களுக்கும் ஒவ்வொரு ஆசை... ஏன் பேராசை என்றுகூடச்சொல்லலாம் அதை. அவற்றின் ஆசைகள் என்ன தெரியுமா?

மிகப்பருத்த முதலாவது மரத்தின் ஆசை தான் பருமன் என்பதால் தன்னைக்கொண்டு மிகச்சிறந்த பெட்டகம் ஒன்று அடைக்கப்படவேண்டும் எனவும் அந்த பெட்டகத்தில் உலகில் விலைமதிப்பில்லாத பொருளொன்று வைக்கப்படவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டது.

இரண்டாவது சீரான உயரமான மரம் வேண்டிக்கொண்டதோ இப்படி... இறைவா நான் சீரான நீளம் உடையவன் என்பதால், என்னை மகாசமுத்திரத்தில் கப்பலாக செய்து ஓட வைக்கவேண்டும், அதில் மன்னாதி மன்னர் ஒருவர் ஏறி பயணம் செய்யவேண்டும் என்றது.

மூன்றாவது மரத்தின் ஆசையோ... இறைவா நான் கிளைபரப்பி அழகாக இருக்கின்றேன் இறைவா... நான் உம்மை ஒரு தடைவ சுமக்கவேண்டும் இதுவே என் அசை என்றது.

அவை வேண்டிக்கொண்ட அடுத்த நாளே காட்டுவாசிகள் வந்து அந்த மூன்று மரங்களையும் அடியோடு வெட்டிச்சாய்த்தனர். முதலாவது பருத்த மரத்தை, வெட்டி பெரிதாக தோண்டி, ஆடு மாடுகளுக்கு தீவனம்போடும் பெரிய அண்டாவாக அதை தயாரித்தனர், இரண்டாவது ஒரு தோணியாக்கப்பட்டு தொழு நோயாளர்களையும், ஏழைகளையும் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்டது. மூன்றாவதோ பாவம் இரண்டு நீளமான பலகைகளாக அறுக்கப்பட்டு அரச பட்டறையில் அடைக்கப்பட்டது. 

மூன்றும் தம் ஆசைகளையும் நிறைவேறியிருப்பதையும் நினைத்து வேதனை கொண்டன.

ஓர்நாள் மிகக்கடுமையான குளிர் அடித்தது, வானில் என்றுமில்லாத பிரகாசம், பரசவ வலியால் துடிக்கும் ஒரு பெண்ணின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது, அந்த குரல் தீவனம்போட வைக்ககப்பட்டிருந்த பருத்த மரம் இருக்கும் தொழுவத்திற்கு வந்து சேர்தது.
குழந்தையும் பிறந்தது, தந்தையானவர், இந்த பருத்த மரத்தை, சுத்தப்படுத்தி, அதனுள் வைக்கோலை இட்டு, இதமாக பிறந்த குழந்தையினை அதனுள் வைத்தார், ஒளி பொருந்தி அந்த குழந்தையின் ஸ்பரிசம் கிடைக்கும் முன்னமே பருத்த மரம் தன் ஆசைகள் அனைத்தும் நிறைவேறிய பரவச நிலையை அடைந்தது.

சில வருடங்கள் கழிந்து ஏழைகள் செல்லும் கப்பலில் இளம் துறவி ஒருவர் எறினார், அவர் பாதம் பட்டவுடனேயே அந்த இரண்டாவது மரமாகிய தோணியிடம் ஒரு சிலுசிலுப்பு, ஒரு கட்டத்தில் திடீர் என மழை புயல் என்பன தென்படவே அவர் அதை கட்டுப்படுத்தினார், மன்னாதி மன்னரை எதிர்பார்த்திருந்த அந்த இரண்டாவது மரம் பூரண திருப்தியும் பெருமிதமும் அடைந்தது.

இன்னும் சில வருடங்கள் கழித்து பட்டறையில் கிடந்த மூன்றாவது மரம் அவசர அவசரமாக ஒரு கூட்டல்குறிபோல் தறையப்பட்டு, எடுத்துச்செல்லப்பட்டு, முள் முடி சுமந்த ஒருவர்மேல் வைக்கப்பட்டு, அவர் சவுக்கால் அடிக்கப்பட்டு, இதை காவி ஒருமலைவரை சென்று இதிலேயே அறையப்பட்டார். 

விலைமதிப்பில்லாத பொக்கிசம் கேட்ட முதல் மரத்திற்கு தானே அதனுள் இருந்தும், மன்னாதி மன்னனை கொண்டு செல்லக்கேட்ட இரண்டாவது மரத்திற்கு தன்னையே கொண்டு செல்லவைத்தும், தன்னை காவவேண்டும் என்ற கேட்ட மூன்றாவது மரத்தை தானே காவியும் இறைவன் அருள் கொடுத்தார்.

நம்பிக்கையுடன் இருங்கள் இறைவன் நீங்கள் கேட்பதைவிட அதிகமாகவே தருவார்.

Friday, March 2, 2012

நம் வாழ்க்கையின் MCQ



Multiple Choice Questions என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்றே. இன்றும்கூட சர்வதேச ரீதியில் பலதரப்பட்ட பரீட்சைகளுக்கும் இந்த எம்.சீ.க்யூ முறைமூலமான வினாத்தாள்கள் கொடுக்கப்படுகின்றன.
அதில் சரியான விடை நான்கிலும் ஒன்றுதான். என்றாலும் உரிய கேள்விக்கு நான்கு விடைகளும் சரியான பதிலையே சுட்டிநிற்கின்றதுபோல ஒரு மாயை தோன்றும். எனினும் ஏனைய மூன்றிலும் ஒன்றே ஒன்று மிகச்சரியான விடையினை கொண்டதாக இருக்கும் அதனை கண்டுபிடித்தாலே எமது புள்ளிகள் உயரும்.

நாம் வாழும் சவால் மிகுந்த வாழ்விலும், வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் நாம் இந்த எம்.சி.க்யூ போன்ற நான்கு சொய்ஸ்களில் சரியானதை தெரிவுசெய்யும் கட்டத்தில் தவித்திருப்போம். அந்த வாழ்வின் கட்டங்களில் மிகச்சரியானதை நாம் தெரிவு செய்திருந்தோமானால் எம் வாழ்வுப்பாதை வளமானதாக மாற்றப்பட்டு முன்னேறியவர்களாக மாறியிருப்போம். 
விருப்பத்துக்கும், தமது திறமைக்கும் இடையில் சிக்கி பரிதவிப்போர் அதிகம்பேரை நாம் பார்த்திருப்போம். 

எமது செயல்களின் விளைவுகளும் இதே எம்.சி.க்யூ போன்ற நான்கு விடைகளையே எமக்கு திருப்பியும் தந்துவிடுகின்றது.
ஒருவர் எதிர்பார்த்து செய்த செயல் நினைத்தபடி கிடைத்தால் அது திருப்தி, அதே செயல் நினைத்ததைவிட அதிகம் பலன் தந்தால் அது பூரிப்பு, நினைத்ததைவிட சற்று குறைவானால் அதிருப்தி, நினைத்ததே நடக்காதுவிட்டால் தோல்வி.
அதாவது எமது ஒவ்வொரு செயலுக்கும் காலம் கொடுக்கப்போகும் பதிலும் எம்.சி.க்யூபோல நான்காகவே பூரிப்பு, திருப்தி, அதிருப்தி, தோல்வி என்றே அமையப்போகின்றது.

முன்னைய காலங்களைப்போலல்லாது இன்று பல துறைகள் முன்னேற்றப்பாதையிலும், இலாபத்தை தரும் துறைகளாகவும் நாளாந்தம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்று இந்த “மல்ரிபிள் சொய்ஸ்” என்ற நிலை இன்றுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை மட்டும் அன்றி எம் எவ்வொருவரினதும் எதிர்காலத்தையும் வழிவகுக்கக்கூடியதாகவே உள்ளது.
இதில் எமக்கேற்ற மிகச்சரியான தெரிவை நாம் “ரிக்” செய்தால் எமது முன்னேற்றப்பாதையின் பாதை இலகுவாக திறந்துவிட்டதாக கருதமுடிம். இந்தக்கட்டங்களிலேயே ஒருவனுடைய வெற்றிகளும் தோல்விகளும் நிர்ணயிக்கப்படுவதாகவும் உள்ளது.


மிகச்சரியானதை, மிகச்சரியான நேரத்தில், மிகச்சரியான முறையில் தொடங்கினால் அந்தத்தொடக்கத்திலேயே முக்கல்வாசி வெற்றி கிடைத்துவிட்டதாக பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சரியான தெரிவைப்போல் அதற்கு மிக நெருக்கமாக பல மாஜைகளும் தோன்றுவதன் குறியீடுகளாகவே நாம் இந்த எம்.சி.க்யூவை கருதவேண்டும். 
தெரிவுகளை செய்தபோதும் கூட, சில தெரிவுகள் ஏனைய தெரிவுகளைவிட அந்த நேரத்தில் சரியானதாகவே தோன்றினாலும், பின்னர் அது பெரும் ஆபத்தில் போன அபாயகரமான தெரிவுகளும் அண்மைய வரலாறுகளில் இல்லாமல் இல்லை.
தூரநோக்கத்துடன் சிந்திக்கின்றோம் என்ற பெயரில் அந்த நேரத்தில் அப்போது மிகச்சரியாக இருந்த தெரிவு பிழை எனக்கருத்தி, பிழையான தெரிவை, “ரிக்” செய்துவிட்டு அந்தப்பிழையான தெரிவால் அத்திவாரமே தகர்க்கப்பட்ட வரலாறுகளும் உண்டு.


எனவே வாழ்க்கை எம் முன்னால் வைக்கும் எம்.சி.க்யூ தெரிவுகளையும், அதன்மூலம் எமக்கு கிடைக்கப்போகும் அதே எம்.சி.க்யூ விடைகளையும் நாம் மிக அவதானமாக கையாளவேண்டும்.
பரீட்சைகளில் பல கேள்விகள் இருக்கும் ஒன்று பிழையாகப்போனாலும் பரவாய் இல்லை, அனால் எம் வாழ்க்கையின் கால கட்டங்களில் முக்கியமான வேளைகளில் காலம் எமக்கு முன்னாள் வைக்கும் எம்.சி.க்யூ கேள்வி ஒன்றே எனவே நாம் அதைப்பற்றி எம்மையே ஆராய்ந்து சரியான தெரிவை “ரிக்” செய்யவேண்டும். மிகச்சரியானதை “ரிக்” செய்தவர்கள் இன்று நாம் அண்ணாந்து பார்க்கமுடியாத உயரத்தில் உள்ளனர், பிழையாக ரிக் செய்தவர்கள் வாழ்விழந்து போய் உள்ளர். ஒரு சிலர் அதிஸ்ரவசமாக, குறிப்பிட்ட ஒன்றைப்பற்றிய விபரம் அறியாமல் தமது வாழ்வின் கட்டம் ஒன்றில் சாரியான பாதையினை “ரிக்” செய்து வெற்றியின் உச்சிக்கு போனவர்களும் உண்டு. அதேவேளை மிகவும் திறமையுடன், பல செயற்திட்டங்களுடன் முன்னேறி எதோ ஒரு கட்டத்தில் தவறான வாழ்வின் புதிருக்கு விடையினை “ரிக்” செய்து அத்தனை முயற்சிகளையும் போட்டுடைத்தவர்களும் உண்டு.

எனவே இந்த எம்.சி.க்யூ சொல்லும் விடையும் என்னவென்றால், தயமயந்தியாய் இரு என்பதுவே. அதாவது தமந்தியின் சுயம்வரத்துக்கு அவள் நளனைத்தான் காதலிக்கின்றாள் என அறிந்து தேவ குமாரர்கள் பலர் நளனைப்போலவே தாமும் உருக்கொண்டு சுயம்வரத்தில் கலந்துகொண்டபோதும், அதன் சூட்சுமத்தை அறிந்து தேவகுமாரர்களின் பாதம் தரையில் படாது என்ற நுண்மையான விடயத்தை அந்தநேரம் மிகச்சரியான தருணத்தில் அறிவைப்பயன்படுத்தி, உண்மையான நளனுக்கு மாலையிட்டாள் தயமந்தி, அதேபோல எம் வாழ்வு எமக்கு முன்னாள் வைக்கும் பலதரப்பட்ட விடைகளில், மிகச்சரியனதை எமது நுண்அறிவு, அறிவாற்றல் மூலம் தெரிவுசெய்து வாழ்வில் வெற்றிபெறவேண்டும்.