Saturday, March 31, 2012

சின்ன தோல்விகள் பிரமாண்ட வெற்றிக்கே..




கொல்கத்தா தொடரூர்தி நிலையத்தினுள் ஒரு தொடரூர்தி நுளைகின்றது.
மனது முழுவதும் ஏக்கம் கலந்த எதிர்பார்ப்புடன் அந்த தொடரூர்தியில் இருந்து இறங்கினான் ஒரு இளைஞன்.
அடுத்த முறை ஊருக்குத்திரும்புவதற்காக இந்த நிலையத்திற்;கு வரும்போது ஒரு நிரந்தரமான வேலையில் சேர்ந்திருக்கவேண்டும் என மனதிற்குள் சபதம் எடுத்திருந்தான்.

கல்கத்தாவில் சிறு சிறு கூலித்தொழில் புரிந்த தனது நண்பர்கள் தங்கியிருந்த ஒரு சிறிய அறையிலே தங்கிக்கொண்டான் அந்;த இளைஞன். ஏற்கனவே அந்த அறையில் நான்கு பேர்! இவன் ஐந்தாம் நபராக. அந்த சின்னஞ்சிறிய அறையில் ஆறு அடி மூன்று அங்குலம் உயரமுடைய இவனால் கால்களை நீட்டி முழுமையாக படுக்கக்கூட முடியவில்லை.

வேலை தேடும் படலத்தை தொடக்கினான். மூன்று மாதங்கள் ஒடியது தான் மிச்சம். நிறுவனங்களின் வெளியே நிற்கும் பாதுகாப்பு நபரை தாண்டி போவதே பெரிய பாடாக இருந்தது. எல்லா இடங்களிலும் களுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறைதான்.
ஏத்தனை நாள்தான் நண்பர்;களின் உழைப்பில் வயிற்றை கழுவுவது அவர்களே பெரிய கஸ்டத்தின் மத்தியில் சிறு சிறு வேலைகள் செய்து பிழைப்பவர்கள்.
ஊருக்கே திரும்பிவிடலாம், நான் ஒரு அதிஸ்டம் கெட்டவன், இது எவ்வளவு பெரிய நகரம்! இங்கெல்லாம் நம்மளையா கவனிக்கப்போகிறார்கள்? என பெரும் கவலைகளுடன் கண்ணீர் சொரிய பல இராத்திரிகளில் அழுதிருக்கின்றான் அவன்.
இருந்தபோதிலும் இத்தனை பேருக்கு வாழ்வு கொடுத்த இந்த நகரம் எனக்கு ஒரு வேலை கொடுக்காமலா போகப்போகிறது என எண்ணி நம்பிக்கையுடன் இருந்தான்;.

ஒரு நாள் ஓல் இந்தியா ரேடியோ அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள்; தேவை! என்ற விளம்பரத்;தைப்பார்த்து உடனடியாக அதற்கு விண்ணப்பம் செய்தார்;.
இன்று வந்;துவிடுமா? நாளை வந்துவிடுமா? என்று தபால்காரர் வரும் திசையை பார்த்துக்கொண்டிருந்தார். இரண்டு வாரங்கள் கழித்து நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு வந்திருந்தது.

அன்று அந்த அறையில் உற்சாகம் பொங்கி வழிந்தது. நேர்முக அழைப்பு வந்ததற்கே நண்பர்கள் தேனீர் உபசாரம் கொடுத்து கொண்டாடினார்கள்.
அவனது நண்பர்கள் தம் நண்பன் வானொலியில் செய்தி வாசிப்பதை கற்பனை செய்து மகிழ்ந்தார்கள் 
நேர்முகத்தேர்வு, தன் முறை வருவருவதற்காக காத்திருந்தார். ஓவ்வொருவராக உள்ளே சென்று கொண்டிருந்தனர். சேய்திகளை மனதினுள்ளே வாசித்துப்பார்த்தார், பல வினோதமான விளம்பரங்களை பல வகைகளில் சொல்லிப்பார்த்துக்கொண்;டார்.
அடிக்கடி தொண்டையை செருமிக்கொண்டார்.

அமிதாப் பச்சன்…….

தனது பெயர் கூப்பிடப்படவே நம்பிக்கையுடன் உள்ளே போனார். பிரவாகம் கட்டவிழ்த்ததுபோல அங்கே நடந்த குரல்தேர்வில் கர்ஜித்தார். விதவிதமான நிகழ்சிகளை தொகுத்துக்காட்டினார். 

நல்லது வெளியில் காத்திருங்கள் முடிவை சொல்கின்றோம் என்றனர் நிலையத்தினர். காத்திருந்தார் காலையில் இருந்து இரவு ஆகியபின்னும்…
தற்;செயலாக உள்ளே இருந்து வெளியே வந்த பெண் ஒருவர், ஏன் இருக்கின்றீர்கள் என வினாவினார். விடயத்தை சொன்னதும், உள்ளே சென்று மீண்டும் வந்தவர், 
உங்கள் குரல் சரியில்லை, வானொலிக்கு பொருத்தமாக இருக்காது என்றார்.
அமிதாப்பின் காதில்; அந்த வார்த்தைகள் அமிலமாகவே பாய்ந்தது.

நேரக கடற்கரை சென்று குலுங்க குலுங்க அழுதார்…….

அதன் பின்னர், நடிக்கத்தொடங்கி ஒப்பாரும், மிக்காரும் இல்லாத சுப்பர் ஸ்ரார் ஆனதெல்லாம் உங்களுக்கு தெரியும்.

பின்னர் அந்த சிம்மக்குரலுக்கு ஸ்ரார் ரீ.வி வழங்கிய கௌரவம், குரோர்பதியில் கலக்கியது அமிதாப்பிற்கு சொந்தமாக இன்று எத்தனை ரோடியோ சனல்கள் உள்;ளன என்பதும் உங்களுக்கு தெரியும்…
அமிதாப் பச்சனின் விருப்பப்படி அந்த சின்ன அறிவிப்பாளர் வேலை கிடைத்திருந்தால் உலகத்திற்கு ஒரு பெரிய சுப்பர் ஸ்ரார் கிடைத்திருப்பாரா?

சின்ன சின்ன தோல்விகள் எல்லாம் பிரமாண்ட வெற்றிகளுக்கே.



1 comment: