Monday, March 5, 2012

நினைத்ததைவிட நிறைவாக....




ஒரு காட்டின் நடுவில் திட்டியாக இருந்த நிலத்தில் மூன்று பெருவிருட்சங்கள் இருந்தன. அவை மூன்றும் மிகுந்த இறை பக்தி கொண்டவை.



முதலாவது மரம் மிகப்பருத்த மரமாகவும், இரண்டாவது மரம் ஒரே சீரான உயர்ந்த மரமாகவும், மூன்றாவது மரம் நன்றாக கிளைபரப்பி பொலிவான மரமாகவும் இருந்தன.
இறை துதி பாடும் இந்த மூன்று மரங்களுக்கும் ஒவ்வொரு ஆசை... ஏன் பேராசை என்றுகூடச்சொல்லலாம் அதை. அவற்றின் ஆசைகள் என்ன தெரியுமா?

மிகப்பருத்த முதலாவது மரத்தின் ஆசை தான் பருமன் என்பதால் தன்னைக்கொண்டு மிகச்சிறந்த பெட்டகம் ஒன்று அடைக்கப்படவேண்டும் எனவும் அந்த பெட்டகத்தில் உலகில் விலைமதிப்பில்லாத பொருளொன்று வைக்கப்படவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டது.

இரண்டாவது சீரான உயரமான மரம் வேண்டிக்கொண்டதோ இப்படி... இறைவா நான் சீரான நீளம் உடையவன் என்பதால், என்னை மகாசமுத்திரத்தில் கப்பலாக செய்து ஓட வைக்கவேண்டும், அதில் மன்னாதி மன்னர் ஒருவர் ஏறி பயணம் செய்யவேண்டும் என்றது.

மூன்றாவது மரத்தின் ஆசையோ... இறைவா நான் கிளைபரப்பி அழகாக இருக்கின்றேன் இறைவா... நான் உம்மை ஒரு தடைவ சுமக்கவேண்டும் இதுவே என் அசை என்றது.

அவை வேண்டிக்கொண்ட அடுத்த நாளே காட்டுவாசிகள் வந்து அந்த மூன்று மரங்களையும் அடியோடு வெட்டிச்சாய்த்தனர். முதலாவது பருத்த மரத்தை, வெட்டி பெரிதாக தோண்டி, ஆடு மாடுகளுக்கு தீவனம்போடும் பெரிய அண்டாவாக அதை தயாரித்தனர், இரண்டாவது ஒரு தோணியாக்கப்பட்டு தொழு நோயாளர்களையும், ஏழைகளையும் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்டது. மூன்றாவதோ பாவம் இரண்டு நீளமான பலகைகளாக அறுக்கப்பட்டு அரச பட்டறையில் அடைக்கப்பட்டது. 

மூன்றும் தம் ஆசைகளையும் நிறைவேறியிருப்பதையும் நினைத்து வேதனை கொண்டன.

ஓர்நாள் மிகக்கடுமையான குளிர் அடித்தது, வானில் என்றுமில்லாத பிரகாசம், பரசவ வலியால் துடிக்கும் ஒரு பெண்ணின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது, அந்த குரல் தீவனம்போட வைக்ககப்பட்டிருந்த பருத்த மரம் இருக்கும் தொழுவத்திற்கு வந்து சேர்தது.
குழந்தையும் பிறந்தது, தந்தையானவர், இந்த பருத்த மரத்தை, சுத்தப்படுத்தி, அதனுள் வைக்கோலை இட்டு, இதமாக பிறந்த குழந்தையினை அதனுள் வைத்தார், ஒளி பொருந்தி அந்த குழந்தையின் ஸ்பரிசம் கிடைக்கும் முன்னமே பருத்த மரம் தன் ஆசைகள் அனைத்தும் நிறைவேறிய பரவச நிலையை அடைந்தது.

சில வருடங்கள் கழிந்து ஏழைகள் செல்லும் கப்பலில் இளம் துறவி ஒருவர் எறினார், அவர் பாதம் பட்டவுடனேயே அந்த இரண்டாவது மரமாகிய தோணியிடம் ஒரு சிலுசிலுப்பு, ஒரு கட்டத்தில் திடீர் என மழை புயல் என்பன தென்படவே அவர் அதை கட்டுப்படுத்தினார், மன்னாதி மன்னரை எதிர்பார்த்திருந்த அந்த இரண்டாவது மரம் பூரண திருப்தியும் பெருமிதமும் அடைந்தது.

இன்னும் சில வருடங்கள் கழித்து பட்டறையில் கிடந்த மூன்றாவது மரம் அவசர அவசரமாக ஒரு கூட்டல்குறிபோல் தறையப்பட்டு, எடுத்துச்செல்லப்பட்டு, முள் முடி சுமந்த ஒருவர்மேல் வைக்கப்பட்டு, அவர் சவுக்கால் அடிக்கப்பட்டு, இதை காவி ஒருமலைவரை சென்று இதிலேயே அறையப்பட்டார். 

விலைமதிப்பில்லாத பொக்கிசம் கேட்ட முதல் மரத்திற்கு தானே அதனுள் இருந்தும், மன்னாதி மன்னனை கொண்டு செல்லக்கேட்ட இரண்டாவது மரத்திற்கு தன்னையே கொண்டு செல்லவைத்தும், தன்னை காவவேண்டும் என்ற கேட்ட மூன்றாவது மரத்தை தானே காவியும் இறைவன் அருள் கொடுத்தார்.

நம்பிக்கையுடன் இருங்கள் இறைவன் நீங்கள் கேட்பதைவிட அதிகமாகவே தருவார்.

2 comments:

  1. நம்பிக்கை தரும் நல்ல பதிவு.
    நன்று.

    ReplyDelete
  2. ஒவ்வோறு வருடமும் கடைசி நாளில் நான் சொல்லி அனுப்பும் என் பொக்கிஷ கதை...

    பகிர்ந்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி...

    இதுபோன்று இன்னும் தரமான வழிகாட்டி பதிவுகள் தாருங்கள்...

    ReplyDelete