Wednesday, March 7, 2012

உபுண்டு



ஆபிரிக்கா தந்த அருமை தத்துவம் உபுண்டு


ஆபிரிக்க கலாசாரத்தில் உலகம் இப்போது உன்னிப்பாக கண்டு முறைப்படுத்த எத்தனிப்பது உபுண்டு. உபுண்டுவின் அடிப்படைக்கொள்கை 'நீ இல்லாமல் நான் இல்லை' என்பதுதான்.


அதாவது இந்த உலகத்தில் எவரும் தனித்து வாழ்ந்துவிடமுடியாது. இன்று நீங்கள் ஒரு நல்ல நிலையில் உள்ளீர்களே என்றால் அதற்கு பல நூறுபேர், அல்லது பல ஆயிரம்பேர் அதற்கு காரணமாக உங்கள் பின்னால் நிற்கின்றார்கள் அதை நாம்உணரவேண்டும்.
எந்த சந்தர்ப்பத்திலும் அதை மறந்தவிடக்கூடாது.

நாளாந்தம் பலர் எமக்கு உதவிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அனால் இவை அனைத்தையும் நாம் நினைவுவைத்திருப்பதில்லை. ஆனால் அவர்களின் ஒவ்வொரு உதவியும் இல்லாவிட்டால் நாம் இல்லை. நாம் நமக்கு உதவி செய்தவர்களை மறந்தால்க்கூட பவாயில்லை. ஆனால் பலர் நமக்கு உதவி செயதுள்ளனர் செய்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

அதேபோல நாம் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் மலரவேண்டும். இதன்மூலம் மற்றவர்கள் பிழைவிட்டால்க்கூட எங்களுக்கு எரிச்சில் வராது. நேற்று நான் பிழைவிடும் போது ஒருவர் திருத்தி உதவிசெய்தார் இன்று இவனுக்கு உதவ எனக்கு ஒரு சந்தாப்பம் கிடைத்துள்ளதுஎன நினைப்போம். இதுதான் உபுண்டுவின் தத்துவம்.  ச ந்தோசத்திற்கான நிர்வாக முறை.

1 comment:

  1. சார்ந்து வாழ்த்ல் என்பது தானே மனித சமூகத்தின் சிறப்பு...


    உபுண்டுவின் தத்துவம்.. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete